search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹாங்காங்கில் மாடல் அழகி படுகொலை.. காலை வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரம்.. 3 பேர் மீது வழக்கு
    X

    ஹாங்காங்கில் மாடல் அழகி படுகொலை.. காலை வெட்டி பிரிட்ஜில் வைத்த கொடூரம்.. 3 பேர் மீது வழக்கு

    • இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    • முன்னாள் கணவர், கணவரின் சகோதர், தந்தை உள்ளிட்டோரிடம் விசாரணை

    ஹாங்காங்:

    ஹாங்காங் நாட்டில் பிரபல மாடல் அழகியாக இருந்தவர் அபி சோய் (வயது 28). சர்வதேச அளவில் புகழ் பெற்ற அவர், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த 2023-ம் ஆண்டுக்கான எலீ சாப் ஸ்பிரிங் சம்மர் ஹாடி கோட்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடந்த வாரம், எல்அபிசியல் மொனாக்கோ என்ற பேஷன் செய்தி இதழின் டிஜிட்டல் முகப்பு பக்கத்தில் அவரது படம் இடம் பெற்றிருந்தது. சமூக ஊடகத்திலும் பிரபல நபரான அவர், இன்ஸ்டாகிராமில் 1 லட்சம் பாலோவர்களை கொண்டு உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கணவரிடம் இருந்து பிரிந்து விட்டார்.

    இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் காணாமல் போனார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் நேற்று முன்தினம் தாய் போ மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் உள்ள அவரது உடல் பாகங்களை மீட்டனர். அவரது 2 கால்களும் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தன. தலை, உடல் பகுதி மற்றும் கைகளை போலீசார் தேடி வருகின்றனர். அவரை கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளனர்.

    இந்த கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

    மாடல் அழகி அபியின் முன்னாள் கணவர், கணவரின் சகோதர், தந்தை உள்ளிட்டோரை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். முன்னாள் மாமியாரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    Next Story
    ×