இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிப்பு: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்

மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டபோது புற்றுநோய் பாதிப்பு தெரியவந்தது.சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுவெளி நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரை.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிப்பு: பக்கிங்ஹாம் அரண்மனை தகவல்
Published on

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்படுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த மாதம் மூன்று நாட்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது மன்னர் சார்லஸ்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவருக்கு மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளதால், பொதுவெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்க வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதே நேரத்தில் தனது வழக்கமான மற்ற பணிகளை மன்னர் மேற்கொள்வார்.

ஊகங்களைத் தடுக்கவும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் அறிவித்துள்ளார்" என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் (கோப்புப்படம்)

75 வயதான மன்னர் சார்லஸ் கடந்த 2023-ம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக முடிசூடிக் கொண்டார். இரண்டாம் எலிசபெத் ராணி, 2022-ல் உயிரிழந்ததை அடுத்து மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னர் சார்லஸ்க்கு வில்லியம், ஹாரி என இரண்டு மகன்கள் உள்ளனர். ஹாரி குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com