என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கிறார் ஜோ பைடன்
- இந்த மாதம் இறுதியில் நடைபெறும் அபெக் மாநாட்டின்போது சந்திப்பு நடைபெற இருக்கிறது
- ஆக்கப்பூர்வமான உரையாடல்களை நோக்கமாக கொண்டுள்ளோம் என வெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்த மாதத்தின் இறுதியில் அபெக் தலைவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ள இருக்கிறார்.
அப்போது, ஜி ஜின்பிங்கை சந்தித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரின் ஜீன்-பியர், நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் ''ஜோ பைடன் இந்த சந்திப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். உங்களுடைய கேள்விக்கு பதில் இருக்கும் என நினைக்கிறேன்'' எனக் குறிப்பிட்டார்.
இந்திய பிரதமர் மோடிக்கும் அபெக் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேபினட் அளவிலான மந்திரி இந்தியா சார்பில் கலந்த கொள்ள வாய்ப்புள்ளது.
தைவான் தொடர்பான பிரச்சினையில் இரு நாடுகளுக்கு இடையில் மோதல் இருந்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்