search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இரட்டை கோபுர தாக்குதல் தினம் அனுசரிப்பு - அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு
    X

    இரட்டை கோபுர தாக்குதல் தினம் அனுசரிப்பு

    இரட்டை கோபுர தாக்குதல் தினம் அனுசரிப்பு - அதிபர் ஜோ பைடன் பங்கேற்பு

    • அமெரிக்காவில் இரட்டை கோபுரம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
    • இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரத்தை கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி பயங்கரவாதிகள் விமானங்களைக் கொண்டு மோதி தகர்த்தனர். மேலும், ராணுவ தலைமையகமான பெண்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலும் கொடூர தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், இந்த கோர சம்பவத்தின் 21-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பென்டகனில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஜனாதிபதி ஜோ பைடனும், பென்சில்வேனியாவில் அவரது மனைவியும் கலந்து கொண்டனர்.

    இந்த தாக்குதலின் நினைவாக நியூயார்க்கில் கட்டப்பட்டுள்ள நினைவிடத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது கணவருடன் அஞ்சலி செலுத்தினார்.

    Next Story
    ×