search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    தகாத உறவு வைத்திருந்தால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை: இந்தோனேஷியா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
    X

    தகாத உறவு வைத்திருந்தால் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை: இந்தோனேஷியா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

    • இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்
    • கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேஷியாவில் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதன்படி திருமணத்தை மீறி தகாத உறவு வைத்து இருந்தால் ஓராண்டு வரை சிறை தண்டனை கிடைக்கக்கூடிய குற்றமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கான புகாரை கணவர் அல்லது மனைவி, பெற்றோர், குழந்தைகள்தான் கொடுக்க வேண்டும். இந்த சட்டம் இந்தோனேஷியா நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது அந்த நாட்டில் வசித்து வரும் மற்ற நாட்டினருக்கும் பொருந்தும்

    இந்தோனேஷியாவில் அங்கிகரீக்கபட்டுள்ள இந்து மதம், இஸ்லாம், கிருஸ்தவம், பவுத்தம், கன்பூசியம் ஆகிய 5 மதங்களை அவமதித்தால் 5 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் மதநிந்தனைச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. மார்க்சிய லெனினிசத்தை பரப்புபவர்களுக்கு 10 ஆண்டு வரையிலும் கம்யூனியசத்தை பரப்புபவருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் சிறைதண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கருக்கலைப்பை சட்ட விரோதமாக அறிவிக்கும் பழைய சட்டம் தொடரவேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான மருத்துவ சூழலை கருத்தில் கொண்ட பெண்களுக்கும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கும் 12 வாரத்துக்கான கருவை கலைத்து கொள்ளலாம் என்ற விதி விலக்கு அந்த சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. பல நாடுகளில் மரண தண்டனைக்கு எதிர்ப்பு வலுத்தும் வரும் சூழலில் இந்தோனேஷியாவில் மரண தண்டனை தொடரும் என புதிய மசோதாவில் தெரிவிக்கபட்டு உள்ளது. ஆனாலும் மரண தண்டனை கைதிகள் 10 ஆண்டுகள் நன்னடத்தையுடன் இருந்தால் அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாகவோ அல்லது 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் குறிப்படப்பட்டுள்ளது. பதவியில் உள்ள அதிபர்கள், துணை அதிபர்கள் மற்றும் அரசு அமைப்புகளை அவமதித்தால் தண்டனை கொடுக்கும் வகையில் புதிய சட்டம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்தங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×