search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்: இந்த மாதத்தில் 4-வது சம்பவம்
    X

    அமெரிக்காவில் இந்திய மாணவர் மரணம்: இந்த மாதத்தில் 4-வது சம்பவம்

    • அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
    • இந்த மாதத்தில் இதுவரை நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்காவின் ஒஹியோவில் படித்து வந்த இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். நேற்று அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடல் பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனை முடிவில்தான் அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவரும்.

    இந்த மாதத்தில் இது 4-வது சம்பவம். இதற்கு முன்னதாக மூன்று இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியுட்டுள் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    துரதிருஷ்டவமாக ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகெரி உயிரிழந்தது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வன்முறை போன்ற செயல்களால் கொலை நடந்திருக்குமா? என்று சந்தேகிக்கப்படவில்லை. அவரது குடும்பத்தினரை தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்ய தூதரகம் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

    இந்த வார தொடக்கத்தில் கடந்த திங்கட்கிழமை பர்டூ பல்கலைகலைக்கழத்தில் படித்து வந்த நீல் ஆச்சார்யா என்ற மாணவர் மரணம் அடைந்தார். ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில் திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

    ஜனவரி 16-ந்தேதி ஜார்ஜியாவில் உள்ள லிதோனியாவில் அரியானாவைச் சேர்ந்த விவேக் சைனி மரணம் அடைந்தார்.

    இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் படித்த வந்த அகுல் தவான் இந்த மாதத்தின் தொடக்கத்தில் மரணம் அடைந்தார். 18 வயதான அகுல் கடுங்குளிர் காரணமாக உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்கலைக்கழக போலீஸ் துறையின் கவனக்குறைவுதான் அகுல் தவானுக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.

    Next Story
    ×