என் மலர்tooltip icon

    உலகம்

    ரகசா புயல் எதிரொலி: சீனாவில் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு
    X

    ரகசா புயல் எதிரொலி: சீனாவில் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு

    • ரகசா புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது.
    • அந்த மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    பீஜிங்:

    தென் சீனக்கடலில் உருவான புயலுக்கு ரகசா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தைவானைப் பந்தாடிய இந்தப் புயல் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

    மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. குவாங்டாங் மாகாணத்தில் 20 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதனால் அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சுமார் 5 லட்சம் வீடுகள் இருளில் சிக்கித் தவித்தன.

    இதனை தொடர்ந்து கனமழையும் கொட்டித் தீர்த்ததால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறின. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்காக பல இடங்களில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அந்தப் புயல் வியட்நாம் நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    Next Story
    ×