ஏ.ஐ. துறையில் பெரும் இழப்பு ஏற்படும்: பில்கேட்ஸ்

செயற்றை நுண்ணறிவுத்துறை மிகவும் போட்டி வாய்ந்த துறையாக மாறிவிட்டது. ஏ.ஐ. ஒரு நீர்க்குமிழி போன்றது.
ஏ.ஐ. துறையில் பெரும் இழப்பு ஏற்படும்: பில்கேட்ஸ்
Published on

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் நிறுவனர் பில்கேட்ஸ். அபுதாபியில் நடந்த தொழில்மாநாட்டில் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஏ.ஐ. துறையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "செயற்றை நுண்ணறிவுத்துறை மிகவும் போட்டி வாய்ந்த துறையாக மாறிவிட்டது. இருப்பினும் இந்தநிலை வருங்காலத்தில் நீடிக்குமா என்று கேட்டால் இல்லை என்றுதான் பதில் சொல்வேன். ஏ.ஐ. ஒரு நீர்க்குமிழி போன்றது. இதில் அனைத்து நிறுவனங்களின் முதலீடுகளும் உயருமா என்று கேட்டால் வாய்ப்பில்லை. ஆகையால் முதலீட்டாளர்கள் ஒரு மாபெரும் சரிவுக்கு தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com