search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஆங் சாங் சூகியின் நெருங்கிய கூட்டாளிக்கு 21 ஆண்டுகள் சிறை
    X

    ஆங் சாங் சூகியின் நெருங்கிய கூட்டாளிக்கு 21 ஆண்டுகள் சிறை

    • ஆங் சாங் சூகிக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • சூகியின் கூட்டாளியான ஷா மியூட் மவுங் மீது ஊழல் குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளது.

    யாங்கூன் :

    மியான்மர் நாட்டில் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ராணுவம் கைப்பற்றியது. மேலும், அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக ஆங் சாங் சூகி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஆங் சாங் சூகியின் நெருங்கிய கூட்டாளிக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சூகியின் கூட்டாளியான ஷா மியூட் மவுங் மீது ஊழல் குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் அதற்கு தண்டனையாக 21 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுவதாக கோர்ட்டு தெரிவித்துள்ளது.

    ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக கட்சியின் செய்தித்தொடர்பாளராக ஷா மியூட் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×