என் மலர்
அங்கோலா
- தலைநகர் லுடண்டா சென்றடைந்த ஜனாதிபதி முர்முவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
- இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.
லுவாண்டா:
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு 6 நாட்கள் அரசுமுறை பயணமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா மற்றும் போட்ஸ்வானாவிற்கு திரவுபதி முர்மு செல்கிறார். இந்த இரு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் செல்லும் முதல் இந்திய ஜனாதிபதி முர்மு ஆவார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட திரவுபதி முர்மு இன்று அதிகாலை அங்கோலா நாட்டின் தலைநகர் லுவாண்டா சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கோலாவின் ஜனாதிபதியை சந்திக்கும் ஜனாதிபதி முர்மு, இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.
அங்கோலா நாட்டின் 50-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் முர்மு பங்கேற்கிறார். அங்கோலா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.
அங்கோலா பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 11-ம் தேதி போட்ஸ்வானா செல்கிறார். அந்நாட்டின் தலைநகர் கபொரின் செல்லும் முர்மு போட்ஸ்வானா ஜனாதிபதி டுமா டிகொன் பொகோவை சந்திக்கிறார். அதன்பின், போட்ஸ்வானா நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி முர்மு உரையாற்றுகிறார்.
அங்கோலா , போட்ஸ்வானா பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி முர்மு வரும் 13-ம் தேதி நாடு திரும்புகிறார்
- இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- அந்த வைரத்துக்கு ‘லுலோ ரோஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
லுவாண்டா :
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலா வைரங்களை உற்பத்தி செய்யும் உலகின் முதல் 10 நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரங்களை வெட்டி எடுக்கும் சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் அங்கோலாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லுலோ நகரில் ஆஸ்திரேலியாவின் லுகாபா வைர நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கத்தில் மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 170 காரட் என கணக்கிடப்பட்டுள்ளது.
இது, உலகில் கடந்த 300 ஆண்டுகளில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு நிற வைரம் என லுகாபா வைர சுரங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
லுலோ நகரில் கண்டெடுக்கப்பட்டதால், அந்த வைரத்துக்கு 'லுலோ ரோஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த இளஞ்சிவப்பு நிற வைரம் அங்கோலாவில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.






