search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரில் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி என தகவல்
    X

    பாகிஸ்தானின் பலூசிஸ்தான் நகரில் குண்டுவெடிப்பு - 5 பேர் பலி என தகவல்

    • பலூசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குண்டுகள் வெடித்தன.
    • இதில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தலிபான்களின் கிளை பயங்கரவாத அமைப்பு தாக்குதல்களை நடத்தி வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில் ஷப்சல் என்ற பரபரப்பான சாலை உள்ளது. இந்தப் பகுதியில் இன்று மாலை வாகனங்கள் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இந்த சம்பவத்தில் அங்கு நின்றுகொண்டிருந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.

    ஆனால், பலுசிஸ்தான் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர் எனவும், மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என அங்குள்ள செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×