search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் சோகம் - காவல்நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்  4 போலீசார் பலி
    X

    பாகிஸ்தானில் சோகம் - காவல்நிலையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் பலி

    • காவல்நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தனர்.
    • இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்துவா மாகாணத்தின் தெற்கு வாரிஸ்தான் மாவட்டதில் லாகி மர்வத் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

    கையெறி வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்திய நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரீப் அல்வி இரங்கல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்தொழிப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    Next Story
    ×