search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி
    X

    துப்பாக்கி சூடு நடந்த கிரீன்வுட் பார்க் மால்

    அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி

    • உணவகத்தின் அருகில் சந்தேகத்திற்குரிய பை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.
    • இது போன்ற சம்பவத்தால் நாடு பாதிப்படைந்துள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

    கிரீன்வுட்:

    அமெரிக்காவின் இண்டியானா மாநிலம், கிரின்வுட் நகரில் 'கிரீன்வுட் பார்க் மால்' என்ற வணிக வளாகம் உள்ளது. நேற்று மாலை இங்கிருக்கும் உணவகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை சுடத்தொடங்கினார். இதனால் அனைவரும் சிதறி ஓடினர். இந்த திடீர் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கிருந்த ஒருவர் தன் கையிலிருந்த துப்பாக்கியால், துப்பாக்கி சூடு நடத்திய நபரைச் சுட்டுக் கொன்றுள்ளார்.

    இது குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஜிம் ஐசன் கூறியதாவது:

    துப்பாக்கி மற்றும் பலவிதமான வெடிமருந்துகளுடன் வணிக வளாகத்தில் உள்ள உணவகத்தில் நுழைந்த நபர், துப்பாக்கியால் சுடத்தொடங்கினார். அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் ஆயுதமேந்திய நபரைத் தன்னிடம் இருந்த துப்பாக்கியினைக் கொண்டு சுட்டுக்கொன்றார். இந்த சம்பவத்தில் ஆயுதமேந்திய நபர் உட்பட 4 பேர் பலியாயினர். இருவர் படுகாயமடைந்தனர்.

    சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மாலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்றனர். உணவகத்தின் அருகிலுள்ள பாத்ரூம் அருகில் சந்தேகத்திற்குரிய பை ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இண்டியானா போலீஸ் மற்றும் பல விசாரணை அமைப்பினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது போன்ற சம்பவத்தால் நாடு பாதிப்படைந்துள்ளது என இண்டியானாபோலிஸ் காவல்துறை துணை அதிகாரி க்ரிஸ் பேய்லி கூறியுள்ளார்.

    பாதிப்படைந்தவர்களுக்காக வருந்துவதாகவும், அவர்களுக்காக பிரார்தனை செய்வதாகவும் கிரீன்வுட் நகரின் மேயர் மார்க் மையர்ஸ் தெரிவித்தார். இந்த கோரச் சம்பவம் நம் சமூகத்தை பயங்கரமாக தாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

    Next Story
    ×