என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்

X
பெட்டியை எடுக்கும் பயணி
ஒரு கையில் குழந்தை, மறுகையில் சூட்கேஸ் - விமான பயணிகளை மிரளவைத்த தாய்
By
மாலை மலர்17 May 2022 12:49 PM GMT (Updated: 17 May 2022 12:49 PM GMT)

விமானத்தில் கைக்குழந்தையுடன் ஒரு பெண் தனது காலால் விமானத்தின் கேபின் கதவை அசால்ட்டாக மூடியது பார்ப்பவரை மிரள வைத்துள்ளது.
லண்டன்:
வெளிநாட்டு விமானத்தில் கைக்குழந்தையுடன் பயணித்த ஒரு பெண் தனது காலால் விமானத்தில் உள்ள கேபின் கதவை அசால்ட்டாக மூடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விமானம் ஒன்றில் பயணம் முடிந்து அனைத்துப் பயணிகளும் இறங்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஓர் இளம்பெண் ஒரு கையில் தனது கைக்குழந்தையை வைத்துள்ளார். மறு கையில் இருக்கைக்கு மேலிருக்கும் கேபினில் இருந்து மற்றொருவர் உதவியை நாடாமல் தனது பெட்டியை எடுத்துள்ளார்.
அதன்பின், அந்த பெண் கேபின் கதவை மூட தனது காலை நேர் மேலே தூக்கி கேபினை அசால்ட்டாக மூடுகிறார். பார்ப்பதற்கு அவர் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக இருக்கிறார். இந்தக் காட்சியைக் கண்ட சக பயணிகள் மிரட்சி அடைந்தனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
யார் உதவியையும் எதிர்பாராமல் தானாகவே கேபின் கதவை அசால்ட்டாக மூடிய அந்தப் பெண்ணின் திறமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...ஜமைக்கா சென்றடைந்த ராம்நாத் கோவிந்த்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
