என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
இந்தியாவிடம் மேலும் ரூ.7,600 கோடி கடன் கேட்கும் இலங்கை
Byமாலை மலர்29 March 2022 8:35 AM GMT (Updated: 29 March 2022 8:35 AM GMT)
இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
கொழும்பு:
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் இலங்கை கடன் கோரியது.
இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்றுள்ளார்.
இரு நாடுகள் உறவு குறித்து ஆலோசிக்கவும், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சி மாநாட் டில் பங்கேற்கவும் இலங்கை சென்றுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜ பக்சே ஆகியோரை மத்திய வெளியறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
இந்த நிலையில், இலங்கையின் முக்கிய தலைவர்களுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பின்போது இந்தியாவிடம் மேலும் ரூ.7,600 கோடி கடனை இலங்கை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதனை இலங்கை தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.
இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவிடம் இலங்கை கடன் கோரியது.
இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியா வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கிடையே இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், இலங்கைக்கு சென்றுள்ளார்.
இரு நாடுகள் உறவு குறித்து ஆலோசிக்கவும், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சி மாநாட் டில் பங்கேற்கவும் இலங்கை சென்றுள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, நிதியமைச்சர் பசில் ராஜ பக்சே ஆகியோரை மத்திய வெளியறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
இலங்கை அதிபருடனான சந்திப்பின்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வர இந்தியாவின் உதவிகள் தொடரும் என்று ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
இந்த நிலையில், இலங்கையின் முக்கிய தலைவர்களுடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பின்போது இந்தியாவிடம் மேலும் ரூ.7,600 கோடி கடனை இலங்கை கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதனை இலங்கை தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X