என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற மேலும் நான்கு சிறப்பு விமானங்கள்
Byமாலை மலர்22 Feb 2022 6:53 AM GMT (Updated: 22 Feb 2022 6:53 AM GMT)
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ள நிலையில், இந்திய அரசு இந்தியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வருகின்றன. ஆனால், ரஷியா மேற்கு நாடுகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது. ரஷியா படைகளை உக்ரைன் எல்லையில் நிறுத்தி வைத்துள்ள நிலையில், உக்ரைன் கிழக்கு பகுதியில் உள்ள உக்ரைன் அரசுக்கு எதிராக செயல்படும் போராட்டக்காரர்கள் தாக்குதலுக்கு தயாராகி வருகிறார்.
இதனிடையே உக்ரைனில் இருந்து ரஷியாவுக்கு தப்ப முயன்றதாக எல்லையில் ரஷிய ராணுவம் இரண்டு பேரை சுட்டுக்கொன்றது. உக்ரைனின் டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தனி நகரங்களாக புதின் அறிவித்துள்ளார். இதனால் பதட்டம் அதிகரித்துள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள், மாணவர்கள் தற்காலிகமாக வெளியேற அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சிறப்பு விமானங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில், மேலும் நான்கு விமானங்கள் கிவ்-ல் இருந்து டெல்லிக்கு பிப்ரவரி 25, பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 6-ந்தேதிகளில் இயக்கப்படும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X