என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசம் முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை
Byமாலை மலர்9 Nov 2021 1:55 PM GMT (Updated: 9 Nov 2021 1:55 PM GMT)
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வங்காளதேசத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.கே. சின்ஹாவுக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வங்காளதேச நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா. இவர் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவி வகித்தார். சின்ஹா வங்காளதேச நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற முதல் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.
வங்காளதேச அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால், வலுக்கட்டாயமாக தலைமை நீதிபதி பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர் மீது பணமோசடி மற்றும் நம்பிக்கை மீறுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பண மோசடியில் ஆதாயம் பெற்ற முதல் நபராக சின்ஹா உள்ளதாக டாக்கா சிறப்பு நீதிமன்றம் 11 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X