என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி கோரிய பாரத் பயோடெக்
Byமாலை மலர்6 Nov 2021 5:31 AM GMT (Updated: 6 Nov 2021 10:30 AM GMT)
சுமார் 526 சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்தி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அண்மையில் அங்கீகாரம் வழங்கி உள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, 17 நாடுகள் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் 2 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியை செலுத்துவதற்கு பாரத் பயோடெக் நிறுவனம் அனுமதி கோரி உள்ளது. இத்தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்தின் பங்குதாரர் நிறுவனமான ஒகுஜென் தெரிவித்துள்ளது.
2 வயது முதல் 18 வயது வரை உள்ள சுமார் 526 சிறுவர்களுக்கு 28 நாட்கள் இடைவெளியில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்ததில், நல்ல பலன் அளித்துள்ளது. எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. இதன் அடிப்படையில் அமெரிக்க அரசிடம் தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X