search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடகொரிய அதிபர் கிம்
    X
    வடகொரிய அதிபர் கிம்

    மிகவும் கவலைக்கிடமான நிலையில் வடகொரிய அதிபர் கிம்?

    இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று வடகொரியா. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் அந்நாட்டின் கிம் ஜாங் உன் (36) செயல்பட்டு வருகிறார். 

    உலக நாடுகளுடன் பெரும்பாலும் வர்த்தகம் உள்ளிட்ட எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளாத வடகொரியாவில் ஊடகங்கள் உள்பட அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

    வெளிநாட்டு ஊரடங்கள் அந்நாட்டில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு நடக்கும் எந்த ஒரு நிகழ்வும் வெளி உலகிற்கு தெரியாமலேயே உள்ளது.

    குறிப்பாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் வடகொரியாவில் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்ற விவரம் இன்று வரை யாருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்கு வெளி உலக தொடர்பு இல்லாத நிலையில் வடகொரியா உள்ளது.

    வடகொரிய அதிபர் கிம்

    இதற்கிடையில், குடிப்பழக்கம், புகைப்பழக்கத்தை கொண்ட வடகொரிய அதிபர் கிம்முக்கு கடந்த 12-ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் வெளியானது. 

    ஆனால் கிம் செய்துகொண்ட இதய அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

    இறுதியாக கடந்த 11-ம் தேதி அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றிய அதிபர் கிம் அதன்பின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. 

    குறிப்பாக கடந்த 15-ம் தேதி மறைந்த வடகொரியாவின் முன்னாள் அதிபரும் கிம்மின் தாத்தாவுமான கிம் சங்கின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. அரசு விழாவான இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிம் பங்கேற்கவில்லை. 

    ஆண்டுதோறும் நடைபெறும் தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் கிம் இந்த ஆண்டு பங்கேறகாததும், அவர் கடந்த 10 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காததும் அமெரிக்காவின் உளவு அமைப்புக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட கிம் ஜாங் உன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பின் தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்த தகவல் குறித்து வடகொரியா இன்னும் எந்த வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

       

    Next Story
    ×