search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாக்குதலுக்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து 35 பயங்கரவாதிகள் பலி
    X

    தாக்குதலுக்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து 35 பயங்கரவாதிகள் பலி

    ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக வெடிகுண்டுகளை நிரப்பியபோது கார் வெடித்து சிதறியதில் 35 தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். #AfghanistanTaliban #Talibankilled
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதனால் ராணுவ முகாம்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் மற்றும் போலீசார் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், நாட்டின் வடக்கு பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டியுள்ள கந்தஹார் மாகாணம், மருஃப் மாவட்டத்தில்  ராணுவத்தினர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதற்காக ஒரு காரில்  தலிபான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை நிரப்பி கொண்டிருந்தனர்.

    அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கார் வெடித்து சிதறியதில் 35-க்கும் அதிகமான தலிபான் பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும், இந்த தகவலை தலிபான்கள் மறுத்துள்ளனர். #AfghanistanTaliban #Talibankilled
    Next Story
    ×