என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.நா. சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபி அன்னான் உடல் செப்.13-ம் தேதி அடக்கம்
Byமாலை மலர்25 Aug 2018 9:25 AM GMT (Updated: 25 Aug 2018 9:25 AM GMT)
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி அடக்கம் செய்யப்படும் என கானா அதிபர் தெரிவித்துள்ளார். #KofiAnnan #RIPKofiAnnan
அக்ரா:
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில் 8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.
2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா.சபையுடன் பகிர்ந்துகொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவுக்கு அருகாமையில் உள்ள பெர்ன் என்னும் இடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18-ம் தேதி தனது 80-ம் வயதில் கோபி அன்னான் காலமானார்.
தலைசிறந்த ராஜதந்திரியாகவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு அதிபர் நானா அக்குஃபோ-அடோ அறிவித்துள்ளார். #KofiAnnan #RIPKofiAnnan
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில் 8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.
2001-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை ஐ.நா.சபையுடன் பகிர்ந்துகொண்ட கோபி அன்னான், ஓய்வுக்கு பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவுக்கு அருகாமையில் உள்ள பெர்ன் என்னும் இடத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 18-ம் தேதி தனது 80-ம் வயதில் கோபி அன்னான் காலமானார்.
தலைசிறந்த ராஜதந்திரியாகவும் நாட்டுப்பற்று மிக்கவரும் உலக தலைவர்களில் ஒருவருமான அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் செப்டம்பர் 13-ம் தேதி கானாவில் அடக்கம் செய்யப்படும் என கானா நாட்டு அதிபர் நானா அக்குஃபோ-அடோ அறிவித்துள்ளார். #KofiAnnan #RIPKofiAnnan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X