search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரசாரம் ஓய்ந்தது - பாகிஸ்தானில் நாளை தேர்தல்
    X

    பிரசாரம் ஓய்ந்தது - பாகிஸ்தானில் நாளை தேர்தல்

    பாகிஸ்தானில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் ஓய்ந்த நிலையில் நாளை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. #Pakistanelection
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் பாராளுமன்றத்துக்கும், 4 மாகாண சட்டசபைகளுக்கும் நாளை (புதன்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று நள்ளிரவுடன் ஓய்ந்தது.

    பாகிஸ்தான் தேர்தலில் பல்வேறு கட்சிகள் களத்தில் இருந்தாலும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்), பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் ஆகிய கட்சிகள் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. பாராளுமன்ற தேர்தலில் 3,675 பேர், மாகாண சட்டசபை தேர்தல்களில் 8,895 பேர் என மொத்தம் 12,570 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

    தேர்தல் பிரசாரத்தின் போது பல்வேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதல் சம்பவங்களில் 3 வேட்பாளர்கள் உள்பட 180 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். #Pakistanelection
    Next Story
    ×