search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்காவில் படகு விபத்து - உயிரிழப்பு 17 ஆக உயர்வு
    X

    அமெரிக்காவில் படகு விபத்து - உயிரிழப்பு 17 ஆக உயர்வு

    அமெரிக்காவில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். #USBoatAccident
    நியூயார்க்:

    அமெரிக்காவின் மிசவுரி மாநிலம், பிரான்சன் அருகே உள்ள சுற்றுலா தலமான டேபிள் ராக் ஏரியில் சுற்றுலாப் பயணிகள் நேற்று படகு சவாரி செய்தனர். 29 பயணிகள், 2 படகோட்டிகளுடன் சென்ற அந்த படகு திடீரென பலத்த காற்று வீசியதால் நிலைதடுமாறி ஏரியில் மூழ்கியது. தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.



    இந்நிலையில் தீவிர தேடுதலுக்குப் பிறகு மீதமுள்ள 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். எனவே, படகு விபத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்களில் 9 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

    இதற்கிடையே மீட்கப்பட்டவர்களில் 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #USBoatAccident
    Next Story
    ×