search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து குகை மீட்பு பணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களை அனுப்பும் எலன் மஸ்க்
    X

    தாய்லாந்து குகை மீட்பு பணிக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களை அனுப்பும் எலன் மஸ்க்

    தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கியுள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் மற்றும் சிறுவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர்களை நாளை அனுப்ப உள்ளதாக எலன் மஸ்க் தெரிவித்துள்ளார். #ThaiCaveRescue
    பாங்காக்:

    தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் குகைக்குள் சிக்கிக்கொண்டனர். 9 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

    திடீரென பெய்த பெரு மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது. இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு  கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

    முழு வீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேற்று  மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. தேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே,  குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், குகைக்குள் சிக்கியுள்ள பயிற்சியளர் மற்றும் 12 சிறுவர்களை மீட்பதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா கார் நிறுவன தலைமை செயல் அதிகாரி எலன் மஸ்க் அவரது நிறுவனத்தின் போக்குவரத்து திட்டங்களை உருவாக்கும் தலைசிறந்த சுரங்கப்பாதை கட்டுமான பொறியாளர்களை நாளை தாய்லாந்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், குகையின் மேற்புறத்தில் இருந்து ஒரு மீட்டர் அளவிற்கு துளையிட்டு நைலானில் செய்யப்பட்ட பைப்புக்களை செலுத்துவதன் மூலம் குகைக்குள் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். 
    Next Story
    ×