search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊழல் வழக்கில் கைதான மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்
    X

    ஊழல் வழக்கில் கைதான மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கு ஜாமின் வழங்கியது நீதிமன்றம்

    ஊழல் மற்றும் நம்பிக்கை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கு ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Malaysia #NajibRazak
    கோலாலம்பூர்:

    மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

    அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார். தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

    அதேபோல, கடந்த இரு மாதங்களில் நஜீப் ரசாக் வீடு மற்றும் அலுவலகங்களில் பணமோசடி தடுப்பு பிரிவு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் பெட்டி பெட்டியாக நகைகளும், பல லட்சம் மதிப்பிலான பணமும் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.  

    கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை 150 போலீசார் கணக்கீட்டு வந்த நிலையில், அதன் மொத்த மதிப்பு 27.5 கோடி டாலர் ( இந்திய மதிப்பின் படி 188 கோடி 71 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்) என அறிவிக்கப்பட்டது. அவற்றில் 12 ஆயிரம் நகைகள்,  567 ஆடம்பர கைப்பைகள், 234 சன்கிளாசஸ் மற்றும் 423 விலையுயர்ந்த கைக்கடிகாரம் போன்றவை அடங்கும்.

    மேற்கண்ட குற்றச்சாட்டுகளை நஜீப் ரசாக் தரப்பு மறுத்து வந்தாலும், அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலை இருந்து வந்த நிலையில், நேற்று அவர் பணமோசடி தடுப்பு பிரிவு முகமையால் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட நஜீப் ரசாக் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது நம்பிக்கை மோசடி என்ற பிரிவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டை நஜீப் மறுத்தார். மேலும், அவரது தரப்பில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அவரது மனுவை பரிசீலித்த நீதிமன்றம் நஜீப்புக்கு ஜாமீன் வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 லட்சத்து 57 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் 1 கோடி 75 லட்சம்) பிணைத் தொகை கட்ட வேண்டும், பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. #Malaysia #NajibRazak
    Next Story
    ×