என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் துருக்கியில் சுட்டுக்கொலை
Byமாலை மலர்29 May 2018 11:20 AM GMT (Updated: 29 May 2018 11:20 AM GMT)
துருக்கி நாட்டில் இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ShashankGoel
புதுடெல்லி:
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாசங் கோயல். இவர் அம்மாநிலத்தின் தொழிலாளர் துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுபம் கோயல் அமெரிக்காவில் தங்கி அங்கு உள்ள பெடரல் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த சுபம் தனது நண்பருடன் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் சென்றார். விடுமுறைக்கு பின் கலிபோர்னியாவிற்கு செல்ல இருந்தார்.
இந்நிலையில், சுபம் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது நண்பர்கள் பணத்தை கொடுத்துவிட்டனர். ஆனால் சுபம் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுபம் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுபத்தின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தந்தை இந்திய வெளியுறவுத்துறையின் உதவியுடன் சுபத்தின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் துருக்கியில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ShashankGoel
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷாசங் கோயல். இவர் அம்மாநிலத்தின் தொழிலாளர் துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சுபம் கோயல் அமெரிக்காவில் தங்கி அங்கு உள்ள பெடரல் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 28-ம் தேதி நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த சுபம் தனது நண்பருடன் துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் சென்றார். விடுமுறைக்கு பின் கலிபோர்னியாவிற்கு செல்ல இருந்தார்.
இந்நிலையில், சுபம் தனது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த கொள்ளையர்கள் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவரது நண்பர்கள் பணத்தை கொடுத்துவிட்டனர். ஆனால் சுபம் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த கொள்ளையர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுபம் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுபத்தின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தந்தை இந்திய வெளியுறவுத்துறையின் உதவியுடன் சுபத்தின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இந்திய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன் துருக்கியில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #ShashankGoel
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X