search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசிய போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி
    X

    இந்தோனேசிய போலீஸ் தலைமை அலுவலகத்தில் குண்டுவெடிப்பு- ஒருவர் பலி

    இந்தோனேசியாவில் போலீஸ் தலைமை அலுவலகத்தில் இன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். #IndonesiaExplosion
    சுரபயா:

    இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்ததாக கிழக்கு ஜாவா போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். வாகனங்களை ஓட்டி வந்த யாரோ ஒருவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.



    இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அலுவலக வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையிடப்பட்டது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது.

    இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று அடுத்தடுத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. #IndonesiaExplosion
    Next Story
    ×