என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு மலையாளிகளின் மகத்தான பங்களிப்புக்கு பிரதமர் புகழாரம்
Byமாலை மலர்30 Sep 2017 7:09 AM GMT (Updated: 30 Sep 2017 7:09 AM GMT)
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு இங்குள்ள மலையாளிகள் மகத்தான பங்களிப்பு அளித்துள்ளதாக பிரதமர் லீ சியென் லூங் புகழாரம் சூட்டியுள்ளார்.
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் இயங்கிவரும் மலையாளிகள் சங்கத்தின் நூற்றாண்டு விழா விருந்தில் நேற்றிரவு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பங்கேற்று வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உலகின் பல நாடுகளில் தீவிரவாதம், மதவாதம் மற்றும் நிறவெறி மேலோங்கிவரும் வேளையில் இதுபோன்ற வியாதிகளால் சிங்கப்பூர் இன்னும் பாதிக்கப்படாமல் உள்ளது. இதைப்போன்ற அழுத்தங்களில் இருந்து நமது கலப்பு கலாசாரத்தை நம்மால் பாதுகாத்து கொள்ள இயலும்.
வேறுபாடுகளை வலிமையாக மாற்றுவது எப்படி? என்பதை இங்குள்ள மலையாள சமூகத்தார் நமக்கு காட்டியுள்ளனர். எண்ணிக்கையில் சிறிதாக இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இதற்கு முன்னுதாரணம் ஆக முன்னாள் அதிபர் தேவன் நாயர், முன்னாள் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சிங்கப்பூர் நிதி மேலாண்மை குழுமத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ரவி மேனன் ஆகியோரை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1900-ம் ஆண்டுவாக்கில் கேரளாவில் இருந்து மலையாளிகள் சிங்கப்பூரில் குடியேற தொடங்கினர். சிறிய நாடான சிங்கப்பூரில் தற்போது சுமார் 26 ஆயிரம் மலையாளிகள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் தற்போது மூன்று மலையாளிகள் எம்.பி.க்களாக பதவி வகித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மந்திரியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இயங்கிவரும் மலையாளிகள் சங்கத்தின் நூற்றாண்டு விழா விருந்தில் நேற்றிரவு சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் பங்கேற்று வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
உலகின் பல நாடுகளில் தீவிரவாதம், மதவாதம் மற்றும் நிறவெறி மேலோங்கிவரும் வேளையில் இதுபோன்ற வியாதிகளால் சிங்கப்பூர் இன்னும் பாதிக்கப்படாமல் உள்ளது. இதைப்போன்ற அழுத்தங்களில் இருந்து நமது கலப்பு கலாசாரத்தை நம்மால் பாதுகாத்து கொள்ள இயலும்.
வேறுபாடுகளை வலிமையாக மாற்றுவது எப்படி? என்பதை இங்குள்ள மலையாள சமூகத்தார் நமக்கு காட்டியுள்ளனர். எண்ணிக்கையில் சிறிதாக இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளனர். இதற்கு முன்னுதாரணம் ஆக முன்னாள் அதிபர் தேவன் நாயர், முன்னாள் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், சிங்கப்பூர் நிதி மேலாண்மை குழுமத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ரவி மேனன் ஆகியோரை பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 1900-ம் ஆண்டுவாக்கில் கேரளாவில் இருந்து மலையாளிகள் சிங்கப்பூரில் குடியேற தொடங்கினர். சிறிய நாடான சிங்கப்பூரில் தற்போது சுமார் 26 ஆயிரம் மலையாளிகள் வாழ்ந்து வருகின்றனர். சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் தற்போது மூன்று மலையாளிகள் எம்.பி.க்களாக பதவி வகித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் மந்திரியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X