என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்து 7 தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்11 April 2017 11:41 PM GMT (Updated: 11 April 2017 11:41 PM GMT)
மெக்சிகோவில் கட்டடம் கட்டும் வேலையின் போது கான்கிரீட் பலகைகள் சரிந்து விழுந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
மெக்சிகோ:
மெக்சிகோ நகரில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஒன்றை கட்டும் வேலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் கான்கிரீட் உத்திரத்தை கட்டுமானத்தின் மீது வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கான்கிரீட் பலகைகள் திபுதிபுவென சரிந்து விழுந்தன. அதனுள் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அலறித்துடித்தனர்.
உடனடியாக தீயணைக்கும் படையினருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் கான்கிரீட் பலகைகள் அமுக்கியதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்ததால், அவர்களை பிணங்களாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மெக்சிகோ நகரில் வாகனங்கள் நிறுத்துமிடம் ஒன்றை கட்டும் வேலையில் நேற்று முன்தினம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் கான்கிரீட் உத்திரத்தை கட்டுமானத்தின் மீது வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கான்கிரீட் பலகைகள் திபுதிபுவென சரிந்து விழுந்தன. அதனுள் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அலறித்துடித்தனர்.
உடனடியாக தீயணைக்கும் படையினருக்கு தகவல் தரப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் கான்கிரீட் பலகைகள் அமுக்கியதில் 7 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்ததால், அவர்களை பிணங்களாகத்தான் மீட்க முடிந்தது. மேலும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர்களில் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X