search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோமாலிய கடற் கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கப்பல் மீட்பு
    X

    சோமாலிய கடற் கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கப்பல் மீட்பு

    சோமாலிய கடற் கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கப்பலை சோமாலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீட்டனர்.
    மொகதீசு:

    சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த வாரம் கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கப்பல் மற்றும் அதிலிருந்த மாலுமிகள் உள்ளிட்ட 9 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு அந்த கப்பலை சேமாலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீட்டுள்ளனர். அதேநேரத்தில், 9 பேரும் சோமாலிய கடற் கொள்ளையர்களால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து ஹொப்போ பகுதி மேயர் அப்துல்லாஹி அஹ்மது அலி கூறுகையில், இந்திய கப்பலில் இருந்த 2 அதிகாரிகளை மீட்டுள்ளதாகவும், 9 பேர் இன்னமும், சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.



    5 வருடங்களுக்கு பிறகு சோமாலிய கிளர்ச்சியாளர்கள், கடந்த சில வாரங்களாக மீண்டும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சேமாலியாவின் கடற்கொள்ளையர்கள் உலக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறத்தலாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×