என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதி உதவியை குறைக்கும் டிரம்ப்
Byமாலை மலர்16 March 2017 1:32 PM GMT (Updated: 16 March 2017 1:32 PM GMT)
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன்னுடைய முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதியுதவியை பெருமளவில் குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதியுதவியை பெருமளவில் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 சதவீதம் வரை நிதியுதவியை குறைக்க முடிவு செய்திருப்பதால், பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் வெளி நாடுகளுக்கு நிதி வழங்குவதற்காக அமெரிக்கா 40 பில்லியன் டாலர்களை செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியில் 60 சதவிகிதத்தை பொருளாதாரம், முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் 40 சதவிகிதத்தை பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அமெரிக்கா வழங்கும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், ஆப்கானிஸ்தான், ஈராக், கென்யா, நைஜீரியா, தான்சானியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, பாகிஸ்தான், இஸ்ரேல், எகிப்து, மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா அதிக அளவில் நிதியுதவி வழங்கி வருகிறது.
டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, வெளிநாடுகளுக்கு பணத்தை செலவு செய்வதை குறைத்துவிட்டு நாட்டிற்கு அதிகமாக செலவு செய்ய விரும்புவதாக பேசினார். எனவே, அதன் அடிப்படையில் அவரது முதல் பட்ஜெட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய முதல் பட்ஜெட்டில் வெளி நாடுகளுக்கான நிதியுதவியை பெருமளவில் டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 சதவீதம் வரை நிதியுதவியை குறைக்க முடிவு செய்திருப்பதால், பாகிஸ்தான் அதிகம் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் வெளி நாடுகளுக்கு நிதி வழங்குவதற்காக அமெரிக்கா 40 பில்லியன் டாலர்களை செலவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதியில் 60 சதவிகிதத்தை பொருளாதாரம், முன்னேற்றம் ஆகியவற்றுக்கும் 40 சதவிகிதத்தை பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அமெரிக்கா வழங்கும் என ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், ஆப்கானிஸ்தான், ஈராக், கென்யா, நைஜீரியா, தான்சானியா, பாகிஸ்தான், எத்தியோப்பியா, பாகிஸ்தான், இஸ்ரேல், எகிப்து, மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா அதிக அளவில் நிதியுதவி வழங்கி வருகிறது.
டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது, வெளிநாடுகளுக்கு பணத்தை செலவு செய்வதை குறைத்துவிட்டு நாட்டிற்கு அதிகமாக செலவு செய்ய விரும்புவதாக பேசினார். எனவே, அதன் அடிப்படையில் அவரது முதல் பட்ஜெட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X