என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளியேற்றம்
Byமாலை மலர்13 Feb 2017 5:01 AM GMT (Updated: 13 Feb 2017 5:01 AM GMT)
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வீடுவீடாக சோதனை நடத்தப்படுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க புதிய அதிபராக பொறுப்பேற்ற பின் டொனால்டு டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, தற்போது ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கையில் போலீசாரும், குடியுரிமை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அட்லாண்டா, அஸ்டின், சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ், நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் வீடு வீடாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அப்போது குடியுரிமை பெறாமல் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களில் குற்ற பின்னணி இல்லாதவர்களும் அடங்குவர்.
அதன்படி இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் மட்டும் 200 பேர் கைதாகி உள்ளனர். கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அமெரிக்காவில் ஆவணம் இன்றி சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் இடையே கடும் பீதி நிலவுகிறது.
எனவே டிரம்பின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் நகரில் வாஷிங்டன் சதுக்க பூங்காவில் போராட்டம் நடைபெற்றது.
அமெரிக்க புதிய அதிபராக பொறுப்பேற்ற பின் டொனால்டு டிரம்ப் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் என வாக்குறுதி அளித்திருந்தார்.
அதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, தற்போது ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கையில் போலீசாரும், குடியுரிமை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அட்லாண்டா, அஸ்டின், சிகாகோ, லாஸ்ஏஞ்சல்ஸ், நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட நகரங்களில் வீடு வீடாக அதிரடி சோதனைகள் நடைபெற்று வருகிறது.
அப்போது குடியுரிமை பெறாமல் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களில் குற்ற பின்னணி இல்லாதவர்களும் அடங்குவர்.
அதன்படி இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் மட்டும் 200 பேர் கைதாகி உள்ளனர். கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அமெரிக்காவில் ஆவணம் இன்றி சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் இடையே கடும் பீதி நிலவுகிறது.
எனவே டிரம்பின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் நகரில் வாஷிங்டன் சதுக்க பூங்காவில் போராட்டம் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X