என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரிட்டனுக்கு வாருங்கள்: டொனால்ட் டிரம்ப்புக்கு ராணி எலிசபத் அழைப்பு
Byமாலை மலர்28 Jan 2017 6:45 AM GMT (Updated: 28 Jan 2017 6:45 AM GMT)
பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக வருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு ராணி எலிசபத் அழைப்பு விடுத்துள்ளார்.
லண்டன்:
பிரிட்டன் பிரதமர் தெரசா மே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
இருதலைவர்களும் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கினர். தெரசா மேவிற்கு அபிரகாம் லிங்கன் நினைவுச் சின்னத்தை டிரம்ப் வழங்கினார்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டிரம்ப், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய பிரிக்ஸிட் நடவடிக்கை பிரிட்டனுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதிபராக பதவியேற்ற உடனே அமெரிக்காவிற்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக தெரசா மே தனது நன்றியை தெரிவித்தார். அப்போது, பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக வருமாறு டொனால்ட் டிரம்ப்புக்கு ராணி எலிசபத் அழைப்பு விடுத்துள்ளதாக தெரசா மே குறிப்பிட்டார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதவாக்கில் லண்டன் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை நேற்று வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தனர்.
இருதலைவர்களும் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கினர். தெரசா மேவிற்கு அபிரகாம் லிங்கன் நினைவுச் சின்னத்தை டிரம்ப் வழங்கினார்.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டிரம்ப், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிய பிரிக்ஸிட் நடவடிக்கை பிரிட்டனுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
அதிபராக பதவியேற்ற உடனே அமெரிக்காவிற்கு வருமாறு தனக்கு அழைப்பு விடுத்தமைக்காக தெரசா மே தனது நன்றியை தெரிவித்தார். அப்போது, பிரிட்டன் நாட்டுக்கு அரசு முறைப் பயணமாக வருமாறு டொனால்ட் டிரம்ப்புக்கு ராணி எலிசபத் அழைப்பு விடுத்துள்ளதாக தெரசா மே குறிப்பிட்டார்.
இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட டொனால்ட் டிரம்ப், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதவாக்கில் லண்டன் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X