என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு](https://img.maalaimalar.com/Articles/2017/Jan/201701090053400524_US-to-send-300-Marines-to-Afghanistan-Helmand-province_SECVPF.gif)
X
ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு
By
மாலை மலர்8 Jan 2017 7:23 PM GMT (Updated: 8 Jan 2017 7:23 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்:
தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந்தேதி, பின்லேடனின் அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தனர்.
இந்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கிருந்த தலீபான்களை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கு தங்கி இருந்து, தலீபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்கபலமாக இருந்து வந்தன.
ஓரளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங்குள்ள அமெரிக்க படைகளை கொஞ்சம், கொஞ்சமாக விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது. தற்போது ஆப்கானிஸ்தானில் 8 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், காபூல், பாக்ராம் ஆகிய இடங்களில் உள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் ஐ.எஸ். இயக்கத்தினரை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான ஹெல்மாண்ட் மாகாணத்தில் இருந்து அமெரிக்க படைகள் 2014-ம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டன.
அதைத் தொடர்ந்து அங்கு தலீபான்கள் மீண்டும் காலூன்றத்தொடங்கினர். சமீப காலமாக அந்த மாகாணத்தில் தலீபான்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். முக்கிய பகுதிகளை வளைத்துக்கொண்ட அவர்கள், மாகாண தலைநகர் லஷ்கர்காரை நெருங்கி முன்னேறி வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்தையும், கொட்டத்தையும் அடக்க முடியாமல் உள்நாட்டு படைகள் திணறி வருகின்றன.
இந்த நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தில், நேட்டோ படைகள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டது.
இதற்கிணங்க அமெரிக்கா, ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்புவது என முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் மத்திய கட்டளை பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் பேட்லர் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் இன்னும் பயங்கரவாதத்தின் பிடியில்தான் உள்ளது. எங்களது நோக்கம், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பயிற்சியும், ஆலோசனையும் வழங்குவதுதான். ஆப்கானிஸ்தான் அதைக்கொண்டு தங்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எங்களது பணியில் பல ஆபத்துகள் உள்ளன” என குறிப்பிட்டார்.
தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்பி வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது 2001-ம் ஆண்டு, செப்டம்பர் 11-ந்தேதி, பின்லேடனின் அல்கொய்தா இயக்க பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தி, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்தனர்.
இந்த அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கிருந்த தலீபான்களை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து அமெரிக்க படைகள் அங்கு தங்கி இருந்து, தலீபான்களின் ஆதிக்கத்தை ஒடுக்குவதில் உள்நாட்டு படைகளுக்கு பக்கபலமாக இருந்து வந்தன.
ஓரளவு இயல்பு நிலை திரும்பிய நிலையில், அங்குள்ள அமெரிக்க படைகளை கொஞ்சம், கொஞ்சமாக விலக்கிக்கொள்ளும் நடவடிக்கை தொடங்கியது. தற்போது ஆப்கானிஸ்தானில் 8 ஆயிரத்து 500 அமெரிக்க வீரர்கள் மட்டுமே உள்ளனர். அவர்களும், காபூல், பாக்ராம் ஆகிய இடங்களில் உள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் ஐ.எஸ். இயக்கத்தினரை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான ஹெல்மாண்ட் மாகாணத்தில் இருந்து அமெரிக்க படைகள் 2014-ம் ஆண்டு வாபஸ் பெறப்பட்டன.
அதைத் தொடர்ந்து அங்கு தலீபான்கள் மீண்டும் காலூன்றத்தொடங்கினர். சமீப காலமாக அந்த மாகாணத்தில் தலீபான்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். முக்கிய பகுதிகளை வளைத்துக்கொண்ட அவர்கள், மாகாண தலைநகர் லஷ்கர்காரை நெருங்கி முன்னேறி வருகின்றனர். அவர்களின் முன்னேற்றத்தையும், கொட்டத்தையும் அடக்க முடியாமல் உள்நாட்டு படைகள் திணறி வருகின்றன.
இந்த நிலையில் ஹெல்மாண்ட் மாகாணத்தில், நேட்டோ படைகள் தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் கேட்டுக்கொண்டது.
இதற்கிணங்க அமெரிக்கா, ஹெல்மாண்ட் மாகாணத்துக்கு 300 கடற்படை வீரர்களை அனுப்புவது என முடிவு எடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கடற்படையின் மத்திய கட்டளை பிரிவு தளபதி லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் பேட்லர் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் இன்னும் பயங்கரவாதத்தின் பிடியில்தான் உள்ளது. எங்களது நோக்கம், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு பயிற்சியும், ஆலோசனையும் வழங்குவதுதான். ஆப்கானிஸ்தான் அதைக்கொண்டு தங்கள் பலத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும். எங்களது பணியில் பல ஆபத்துகள் உள்ளன” என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)