என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
இந்தியா பகையை தவிர்த்து எங்களுடன் சேர வேண்டும்: பாகிஸ்தான் வலியுறுத்தல்
By
மாலை மலர்21 Dec 2016 1:14 PM GMT (Updated: 21 Dec 2016 1:14 PM GMT)

இந்தியா தனது பகையை தவிர்த்து பொருளாதார பாதை திட்டத்தில் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
இஸ்லாமாபாத்:
CPEC எனப்படுவது சீனா பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழிப்பாதை திட்டம் ஆகும். இந்த பொருளாதார வழிப்பாதையில் சுமார் 51 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் சீனாவின் மேற்கு பகுதிகளை அரேபிய கடல் பகுதியுடன் பலுசிஸ்தான் வழியாக இணைக்கிறது.
இந்நிலையில், இந்தியா தங்கள் நாட்டுடனான பகையை மறந்து, பொருளாதார பாதை திட்டத்தில் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் லெப்டினன்ட் ஜெனரல் அமீர் ரியாஸ் பலோசிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது இதனை வலியுறுத்தினார்.
அப்போது, ”இந்தியா பாகிஸ்தான் உடனான பகையை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் நாச வேலைகளை குறைத்து எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான கனிவான அணுகுமுறை இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக, சீனா பாகிஸ்தான் இடையிலான இந்த பொருளாதார பாதை திட்டம் குறித்து இந்தியா ஏற்கனவே தனது கவலையை தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது.
CPEC எனப்படுவது சீனா பாகிஸ்தான் இடையேயான பொருளாதார வழிப்பாதை திட்டம் ஆகும். இந்த பொருளாதார வழிப்பாதையில் சுமார் 51 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த திட்டம் சீனாவின் மேற்கு பகுதிகளை அரேபிய கடல் பகுதியுடன் பலுசிஸ்தான் வழியாக இணைக்கிறது.
இந்நிலையில், இந்தியா தங்கள் நாட்டுடனான பகையை மறந்து, பொருளாதார பாதை திட்டத்தில் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் லெப்டினன்ட் ஜெனரல் அமீர் ரியாஸ் பலோசிஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது இதனை வலியுறுத்தினார்.
அப்போது, ”இந்தியா பாகிஸ்தான் உடனான பகையை தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் நாச வேலைகளை குறைத்து எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான கனிவான அணுகுமுறை இந்தியா பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.
முன்னதாக, சீனா பாகிஸ்தான் இடையிலான இந்த பொருளாதார பாதை திட்டம் குறித்து இந்தியா ஏற்கனவே தனது கவலையை தெரிவித்துள்ளது. ஏனெனில் இந்த திட்டம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
