என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீவிரவாதிகளை அடக்குவதில் பாகிஸ்தான் அரசு தோல்வி: சுப்ரீம் கோர்ட்டு அறிக்கை
Byமாலை மலர்17 Dec 2016 4:50 AM GMT (Updated: 17 Dec 2016 4:50 AM GMT)
தீவிரவாதிகளை அடக்குவதில் பாகிஸ்தான் அரசு தோல்வி அடைந்து விட்டது என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் பலியானார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 45 அதிகாரிகள் அடங்கிய கமிஷன் அமைத்தது.
அந்த கமிஷன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 86 பக்க அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய தீவிரவாத தடுப்பு துறை தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் அடக்க தவறிவிட்டது.
அதன் விளைவு தற்போது உடனடியாக தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் பகிரங்கமாக செயல்படவும், பேரணி நடத்தவும் உளவுத்துறையும், சட்ட அமலாக்க பிரிவும் எப்படி அனுமதிக்கிறது. ஏன் என்று புரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 140 பள்ளி குழந்தைகள் உள்பட 154 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்டு மாதம் பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 70 பேர் பலியானார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 45 அதிகாரிகள் அடங்கிய கமிஷன் அமைத்தது.
அந்த கமிஷன் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 86 பக்க அறிக்கை தாக்கல் செய்தது.
அதில் பாகிஸ்தான் அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய தீவிரவாத தடுப்பு துறை தீவிரவாதிகளையும், தீவிரவாதத்தையும் அடக்க தவறிவிட்டது.
அதன் விளைவு தற்போது உடனடியாக தெளிவாக தெரியவில்லை. அதே நேரத்தில் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத இயக்கங்கள் பகிரங்கமாக செயல்படவும், பேரணி நடத்தவும் உளவுத்துறையும், சட்ட அமலாக்க பிரிவும் எப்படி அனுமதிக்கிறது. ஏன் என்று புரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த 2014-ம் ஆண்டு பெஷாவர் ராணுவ பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய 2-வது ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இத்தாக்குதலில் 140 பள்ளி குழந்தைகள் உள்பட 154 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X