search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜப்பானில் மான்கள் மூலம் பீட்சா வினியோகம்
    X

    கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஜப்பானில் மான்கள் மூலம் பீட்சா வினியோகம்

    ஜப்பானில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு கலை மான்கள் மூலம் பீட்சா வினியோகம் செய்யப்பட உள்ளது.
    டோக்கியோ:

    ஜப்பானில் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    எனவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வாடிக்கையாளர்களுக்கு பீட்சா வினியோகம் செய்ய முடியாத நிலை உள்ளது.



    அதை தவிர்க்க பிரபல நிறுவனமான டாமினோஸ் பீட்சா ஒரு புதுமுடிவை மேற்கொண்டுள்ளது. அதன்படி கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பனிச்சறுக்கு வண்டியை இழுக்கும் பெரியகொம்புகள் கொண்ட கலைமான்கள் மூலம் பீட்சா வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக கலை மான்களுக்கு மிருக பயிற்றுனர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். இஷிகர், ஹோக்காய்டோ உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் இப்பயிற்சி குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

    ஆகவே ‘பீட்சர்’ பிரியர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம். கட்டாயம் தாங்கள் விரும்பும் பீட்சா டெலிவரி செய்யப்படும் என அந்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நியூசிலாந்தில் ‘டிரோன்’ (ஆளில்லா விமானம் மூலம்) பீட்சா வினியோகம் செய்யப்படும் என அறிவித்தது. அதற்கான பரிசோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
    Next Story
    ×