என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வியட்நாமில் பஸ்சில் கடத்தப்பட்ட 120 நாகப்பாம்புகள் பறிமுதல்
Byமாலை மலர்26 Nov 2016 9:10 AM GMT (Updated: 26 Nov 2016 9:10 AM GMT)
வியட்நாமில் டக்நாங் மாகாணத்தில் பஸ்சில் கடத்தப்பட்ட 120 நாகப்பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கனோய்:
வியட்நாமில் டக்நாங் மாகாணத்தில் பஸ்சில் நாகப்பாம்புகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அந்த பஸ்சை போலீசார் மடக்கி நிறுத்தினர்.
அதில் 4 பேர் மட்டுமே இருந்தனர். பின்னர் பஸ்சை சோதனை செய்த போலீசார் அங்கிருந்த 15 பிளாஸ்டிக் பெட்டிகளை கைப்பற்றி சோதனை நடத்தினர். அதில் உயிருடன் 120 நாகப் பாம்புகள் இருந்தன.
விஷத் தன்மையுள்ள அவை பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. எனவே அவற்றை பஸ் போன்ற வாகனங்களில் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கடத்தப்பட்ட நாகப் பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மொத்த எடை 220 கிலோ. வியட்நாமில் நாகப்பாம்புகள் இறைச்சிக்காகவும், பாரம்பரிய மருந்துகளுக்காகவும் அதிக அளவில் கொன்று அழிக்கப்படுகின்றன. அதற்காக இவை கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X