search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபர் தேர்தல்: மறுபடி ஓட்டு எண்ணிக்கை நடத்த ஹிலாரி அணி கோரிக்கை
    X

    அமெரிக்க அதிபர் தேர்தல்: மறுபடி ஓட்டு எண்ணிக்கை நடத்த ஹிலாரி அணி கோரிக்கை

    அமெரிக்க அதிபர் தேர்தலில் 3 மாகாணங்களிலும் மறுபடியும் ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என ஹிலாரி ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8-ந் தேதி நடைபெற்றது. இதில், ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டொனால்டு டிரம்ப் வெற்றியை தட்டி சென்றார்.

    ஆனாலும், மக்கள் அளித்த ஓட்டுகள் எண்ணிக்கையில் ஹிலாரிக்குதான் அதிக ஓட்டுகள் கிடைத்திருந்தன. அந்த நாட்டு நடைமுறைப்படி அதிபரை தேர்வு செய்ய தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த தேர்வாளர்கள்தான் அதிபரை தேர்வு செய்ய வேண்டும்.

    அதன்படி டொனால்டு டிரம்புக்குதான் அதிக தேர்வாளர்கள் கிடைத்தனர். எனவே, அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. ஹிலாரி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிக்சிகான், பென்சில்வேனியா, விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் டெனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

    அமெரிக்க தேர்தலில் ஒவ்வொரு மாகாணங்களிலும் ஒவ்வொரு முறையில் தேர்வு நடத்தப்படுகிறது. ஓட்டு சீட்டு முறை, ஓட்டு எந்திர முறை, இ-மெயிலில் ஓட்டுகளை அனுப்பும் முறை என பல வகை ஓட்டு பதிவு முறை பயன்படுத்தப்பட்டது.

    இதில் இந்த 3 மாகாணங்களிலும் கம்ப்யூட்டர் உதவியுடன் செயல்பட்ட ஓட்டு எந்திர முறை பயன்படுத்தப்பட்டது. அந்த ஓட்டு எந்திரத்தை ஹேக்கிங் முறையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தகவல்களை மாற்றி முறைகேடு செய்திருக்கலாம் என பிரபல கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் அலெக்ஸ்ஹால்டர்மென் கூறி இருக்கிறார்.

    எனவே, இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

    இதையடுத்து ஹலாரி ஆதரவாளர்கள் 3 மாகாணங்களிலும் மறுபடியும் ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும். தவறு நடந்ததா? என கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதன்படி மறுபடி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுமா? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.

    Next Story
    ×