search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லிபியா அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலி
    X

    லிபியா அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலி

    லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்ற அகதிகள் படகு கடலில் மூழ்கி 100 பேர் பலியாயினர்.

    திரிபோலி:

    லிபியாவில் இருந்து ஒரு அகதிகள் படகு ஐரோப்பிய நாடுகளுக்கு புறப்பட்டு சென்றது. அதில் 122 பேர் இருந்தனர். அவர்களில் 10 பேர் பெண்கள். இந்த படகு மத்திய தரைக்கடலில் சென்று கொண்டிருந்த போது திடீரென தண்ணீ ரில் மூழ்கியது. எனவே, படகில் பயணம் செய்தவர்கள் தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஜெர்மனியின் சென்னை கப்பல் அங்கு விரைந்து சென்று 23 பேரை காப்பாற்றியது. இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த மீட்பு படையினர் கடலில் மூழ்கியவர்களை தேடி வருகின்றனர்.

    படகில் பயணம் செய்த 100 பேரை காணவில்லை. எனவே அவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    Next Story
    ×