என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாகிஸ்தானில் போலி என்கவுண்ட்டரில் 4 பேர் பலி
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணம், கவதார் மாவட்டத்தில் பேலார், குலாஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படையினர் போலி என்கவுண்ட்டர் நடத்தி 4 பேரை கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பலியானவர்களின் உடல்கள் தேசிய அடையாள அட்டைகள், மாணவர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் கேச் மாவட்டத்தை சேர்ந்த மாஸ்டர் அப்துல் ரகுமான் என்பவருடைய 14 வயது மகன் ஜபார் பலோச், அப்துல் சமது என்பவரின் மகன் சலாகுதீன், கரீம் பாக்ஷ் என்பவரது மகனான சாஜித் அலி, முகமது என்பவருடைய மகனான சபீர் அலி ஆவார்கள்.
பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸ் நகரில் இயங்கி வருகிற பலோச் மனித உரிமை அமைப்பு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பு படையினர், கவதார் மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
கொல்லப்பட்ட 4 பேரும் நீண்ட காலத்துக்கு முன்பு காணாமல் போனவர்கள் என்றும், அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்