என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே வெடியில் 5 டன் போதைப் பொருட்களை அழித்த ஆப்கானிஸ்தான் அதிகாரிகள்
Byமாலை மலர்16 Oct 2016 8:01 PM GMT (Updated: 16 Oct 2016 8:01 PM GMT)
ஹெராயின், ஹஷிஷ், ஆல்கஹால் உள்ளிட்ட பல்வேறு வகையான 5 டன் போதைப் பொருட்களை வெடி வைத்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று அழித்தனர்.
காபூல்:
ஹெராயின், ஹஷிஷ், ஆல்கஹால் உள்ளிட்ட பல்வேறு வகையான 5 டன் போதைப் பொருட்களை வெடி வைத்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று அழித்தனர்.
ஆப்கானிஸ்தானில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆப்கன் போலீஸ் அதிகாரி அயுப் அன்சாரி கூறுகையில், “இந்த நடவடிக்கை போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நாங்கள் எடுத்துக் கொண்ட செயல் ஆகும். போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்றார்.
ஒரு டன் ஹெராயின் மதிப்பு போதைப்பொருள் மற்றும் குற்றநடவடிக்கை தொடர்பான ஐ.நா. அலுவலத்தின் தகவல்படி ஐரோப்பிய சந்தையில் சுமார் 40 மில்லியன் யூரோ ஆகும்.
ஒரு பக்கம் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்தாலும், கடந்த ஆண்டு உலகின் போதை பொருள் தேவையில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தான் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெராயின், ஹஷிஷ், ஆல்கஹால் உள்ளிட்ட பல்வேறு வகையான 5 டன் போதைப் பொருட்களை வெடி வைத்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் நேற்று அழித்தனர்.
ஆப்கானிஸ்தானில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஆப்கன் போலீஸ் அதிகாரி அயுப் அன்சாரி கூறுகையில், “இந்த நடவடிக்கை போதைப் பொருட்களை கட்டுப்படுத்த நாங்கள் எடுத்துக் கொண்ட செயல் ஆகும். போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்றார்.
ஒரு டன் ஹெராயின் மதிப்பு போதைப்பொருள் மற்றும் குற்றநடவடிக்கை தொடர்பான ஐ.நா. அலுவலத்தின் தகவல்படி ஐரோப்பிய சந்தையில் சுமார் 40 மில்லியன் யூரோ ஆகும்.
ஒரு பக்கம் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்தாலும், கடந்த ஆண்டு உலகின் போதை பொருள் தேவையில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தான் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X