என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் பிரச்சனையில் தலையிடுங்கள்: ஜான் கெர்ரியிடம் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தல்
Byமாலை மலர்19 Sep 2016 10:54 PM GMT (Updated: 19 Sep 2016 10:54 PM GMT)
காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை மந்திர் ஜான் கெர்ரியிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.
நியூயார்க்:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுசபை கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ஷெரீப் அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஆகியோரை சந்தித்துள்ளதாக ஐ.நா.விற்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.
ஜான் கெர்ரி உடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்சனையில் அமைதியான தீர்வு கிடைக்க அமெரிக்கா தலையிட வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஷ், வெளியுறவுத் துறை செயலாளார் அய்ஜாஸ் அகமது சவுத்ரி ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
முன்னதாக, காஷ்மீர் மாநில உரி தீவிரவாத தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொதுசபை கூட்டம் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா சென்றுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ஷெரீப் அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஆகியோரை சந்தித்துள்ளதாக ஐ.நா.விற்கான பாகிஸ்தான் தூதர் மலீகா லோதி தனது டுவிட்டர் வலைதளத்தில் கூறியுள்ளார்.
ஜான் கெர்ரி உடனான சந்திப்பின் போது, காஷ்மீர் பிரச்சனையில் அமைதியான தீர்வு கிடைக்க அமெரிக்கா தலையிட வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவுத் துறை ஆலோசகர் சர்தாஜ் அஜிஷ், வெளியுறவுத் துறை செயலாளார் அய்ஜாஸ் அகமது சவுத்ரி ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
முன்னதாக, காஷ்மீர் மாநில உரி தீவிரவாத தாக்குதல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X