என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்: ஒபாமா பளீர் பேட்டி
Byமாலை மலர்19 Sep 2016 4:36 AM GMT (Updated: 19 Sep 2016 4:36 AM GMT)
ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
வாஷிங்டன்:
ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார்.
தனது ஆட்சியின்கீழ் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக வருவதற்கு தற்போதையை அதிபரான பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நியூயார்க் நகரில் ஹிலாரி கிளிண்டனுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக இதுவரை ஒரு பெண்மணிகூட பதவி வகிக்காதது தொடர்பாக இந்நிகழ்ச்சியில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்ட ஒபாமா, ’அதிகாரம்மிக்க பதவிகளில் பெண்கள் அமர்வதை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில் உள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவர்கள் அதிகாரத்துக்கு வருவது, நமக்கு பலவகைகளில் இடையூறு என கருதுகிறோம். இத்தகைய நியாமற்ற கருத்து பல வகைகளில் எதிரொலித்தும் வருகிறது’ என்று கூறினார்.
ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழிலதிபரான டொனால்ட் டிரம்ப் மோதுகிறார்.
தனது ஆட்சியின்கீழ் வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றிய ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராக வருவதற்கு தற்போதையை அதிபரான பராக் ஒபாமா வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், நியூயார்க் நகரில் ஹிலாரி கிளிண்டனுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் போன்ற பெண்மணிகள் நாட்டின் அதிகாரம்மிக்க பதவிகளில் அமருவதை ஏற்றுக்கொள்ள அமெரிக்க மக்கள் தயக்கம்காட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக இதுவரை ஒரு பெண்மணிகூட பதவி வகிக்காதது தொடர்பாக இந்நிகழ்ச்சியில் தனது கருத்தினை பகிர்ந்து கொண்ட ஒபாமா, ’அதிகாரம்மிக்க பதவிகளில் பெண்கள் அமர்வதை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில் உள்ள ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவர்கள் அதிகாரத்துக்கு வருவது, நமக்கு பலவகைகளில் இடையூறு என கருதுகிறோம். இத்தகைய நியாமற்ற கருத்து பல வகைகளில் எதிரொலித்தும் வருகிறது’ என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X