என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துருக்கியில் காவல்துறை தலைமையகத்தை குறிவைத்து கார் குண்டு தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்18 Aug 2016 7:09 AM GMT (Updated: 18 Aug 2016 7:09 AM GMT)
துருக்கியில் இன்று குர்திஷ் தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இஸ்தான்புல்:
துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் மாகாணத்தின் மத்திய இபேக்யோலு மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய தலைமையகம் மற்றும் குடியிருப்பை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் நாட்டு எல்லையருகே நடந்த இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்ததையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு படையினரை குறிவைத்து குர்திஷ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, இந்த தாக்குதலுக்கும் அவர்களே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பினால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) தென்கிழக்கு குர்திஷ் பகுதியில் சுயாட்சி அமைப்பதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆயுத தாக்குதல் மற்றும் சண்டையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
துருக்கியின் கிழக்கு பகுதியில் உள்ள வான் மாகாணத்தின் மத்திய இபேக்யோலு மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய தலைமையகம் மற்றும் குடியிருப்பை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் நாட்டு எல்லையருகே நடந்த இந்த தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், 40 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடந்ததையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. பாதுகாப்பு படையினரை குறிவைத்து குர்திஷ் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்துகின்றனர். எனவே, இந்த தாக்குதலுக்கும் அவர்களே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
துருக்கி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பினால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) தென்கிழக்கு குர்திஷ் பகுதியில் சுயாட்சி அமைப்பதற்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. ஆயுத தாக்குதல் மற்றும் சண்டையில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X