என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
    X

    மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

    • சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.25 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து முன்கூட்டியோ அல்லது குறிப்பிட்ட நாளிலோ தண்ணீர் திறப்பது வழக்கம். ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி நிறுத்தப்படும்

    இதே போல் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தொடர்ந்து அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த ஆண்டு தண்ணீர் அதிகளவில் வந்ததால் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பாசனத்தேவை நிறைவடைந்ததை அடுத்து நேற்று மாலை 6 மணி முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதுவரை ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று வரை 199 நாட்களுக்கு 8.6 டி.எம்.சி, தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.25 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 61.33 டி.எம்.சி, தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×