அவினாசி அருகே சோகம்: ஆன்லைனில் கடன் வாங்கிய டெய்லர் தற்கொலை

கடன் சுமை அதிகமாகி விட்டதால் தினமும் மனைவியிடம் புலம்பி வந்துள்ளாமன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவினாசி அருகே சோகம்: ஆன்லைனில் கடன் வாங்கிய டெய்லர் தற்கொலை
Published on

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா ஆட்டையம்பாளையம் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 42). இவர் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் செயல்படும் ஒரு பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வந்தார். இவர் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக நிறைய கடன்கள் வாங்கினார்.

கடன் சுமை அதிகமாகி விட்டதால் தினமும் மனைவியிடம் புலம்பி வந்துள்ளார். மன அழுத்தத்தில் இருந்து வந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து வந்த அவிநாசி போலீசார் உடலை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைனில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் டெய்லர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com