என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் திடீர் கனமழை - விமான சேவை பாதிப்பு
- சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
- சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
சென்னையில் பெய்த திடீர் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பை-ஐதராபாத், பெங்களூரு-சென்னை, திருச்சி-சென்னை விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காற்று, கனமழையின் காரணமாக ஒவ்வொரு விமானமும் தரையிறங்குவதில் 30 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து சென்னையில் தரையிறங்க வந்த ஏர் இந்தியா விமானம், பெங்களூருவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் தரையிறங்க வந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள், தரையிறங்க முடியாமல் வானில் வட்டம் அடித்து வருகிறது.






