என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை அருகே புதிய சர்வதேச நகரம்- டெண்டர் கோரிய டிட்கோ நிறுவனம்
- 5 இடங்களை அடையாளம் காணப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை டிட்கோவுக்கு சமர்பிக்கப்பட்டது.
- மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி 2000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 5 இடங்களை அடையாளம் காணப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை டிட்கோவுக்கு சமர்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய சர்வதேச நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மாஸ்டர் பிளான் தயாரிக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
Next Story






