என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
    X

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.
    • தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தாண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதையடுத்து அணையில் இருந்து நீர்மின்நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 18 ஆயிரத்து 300 கனஅடியும், 16 கண்மதகு வழியாக வினாடிக்கு 16 ஆயிரத்து 700 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×